(லஹிரு உள்ளிட்ட பல்கலைக்கழ மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்)
நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர, பிக்குகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெம்பிட்டிய சுகாதானந்த தேரர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இன்று(16) பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழக முன்னிலையிலும் மிஹிந்தலை நகரிலும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று(16) பிற்பகல் 12:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.