(பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்குவது குறித்து ஜனாதிபதி சட்ட ஆலோசனை)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கவது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனைக் கூறினார். மேலும் கூறிய அவர்,
19வது அரசியலமைப்பு சீர் திருத்தத்தின் படி தற்போது பதவியில் இருக்கின்ற பிரதமரை பதவி நீக்குவது குறித்து சட்ட ஆலோசனைகளை கேட்டுள்ளதாக குமார் வெல்கம கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கின்ற சம்பந்தத்தை நிறுத்திவிட்டு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படுமாக இருந்தால் தாம் நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.