• Sun. Oct 12th, 2025

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Byadmin

Mar 5, 2018

(15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை)

தேசிய அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 வயது முழுமையடைந்தவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் இது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் முறையில் எவ்வித மாற்றமும் எற்படாதென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்காக பிறப்பு சான்றிதழ் மற்றும் தெளிவான புகைப்படம் சமர்ப்பித்தால் போதுமானதென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *