நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்தனையில் நூருல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் பசூர் மொஹாமட் தலைமையில் நேற்று (10) மாலை நடைபெற்றுள்ளன.
இதன்போது, பிரதம அதிதியாக நாவலப்பிட்டி ஹாஷ்மி அரபிக் கல்லூரியின் உப அதிபர் மௌலவி நசீர் (ஹாஷ்மி) கலந்து கொண்டுள்ளார்.
மேலும், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் எம்.ஏ.எஸ்.அபுசாலி, செயலாளர் ஹாரிஸ், பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, சர்வமத தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, திறப்பு விழாவின் பின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளன.