புது வருடத்தை முன்னிட்டு நாளைய தினம் 12 விசேட புகையிரதங்கள் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரவு 7.20 க்கு கொழும்பு தொடக்கம் பண்டாரவளை நோக்கி குளிரூட்டப்பட்ட புகையிரதம் பயணிக்கவுள்ளதாகவும், நாளை இரவு 10 மணிக்கு கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலும், மாலை 6.50 மணிக்கு கொழும்பு தொடக்கம் காலி வரையில் இரு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டை தொடக்கம் மஹவ வரை இரு விசேட புகையிரதங்களும், மருதானை தொடக்கம் காலி மற்றும் மாத்தறை வரை 4 விசேட புகையிரதங்களும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.