• Sun. Oct 12th, 2025

அதிவேக பாதையில் 11 ஆம் திகதி கிடைத்த 3 கோடி ரூபாய்கள்

Byadmin

Apr 17, 2018

(அதிவேக பாதையில் 11 ஆம் திகதி கிடைத்த 3 கோடி ரூபாய்கள்)

அதிவேக பாதையின் அதிகூடிய இலாபம் கடந்த 11 ஆம் திகதி கிடைக்கப் பெற்றதாகவும் இதன் பெறுமானம் மூன்று கோடிகள் எனவும் அதிவேக பாதையின் செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் மாத்திரம் 105000 வாகனங்கள் அதிவேக பாதையில் பயணித்துள்ளன. இதில் அதிகமான வாகனங்கள் கொழும்பிலிருந்து வெளி பகுதிகளுக்கு செல்பவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி 40 ஆயிரமும், 15  ஆம் திகதி 80 ஆயிரம் வாகனமும் அதிவேக பாதையில் பிரவேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பயணிகளின் நலன் கருதி விசேட பஸ் சேவைகள் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தள்ளது.
போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 76 மில்லியன் ரூபாவென சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *