• Sat. Oct 11th, 2025

இலங்கையில் தங்கத்தின் விலை, கிடுகிடு என உயர்வு

Byadmin

Apr 20, 2018

(இலங்கையில் தங்கத்தின் விலை, கிடுகிடு என உயர்வு)

இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
15 வீத வரி விதிப்பை அடுத்து 8 கிராம் எடை கொண்ட 24 கரட் தங்கத்தின் விலை,  62,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டுக்கு முன்னர், 8 கிராம் தங்கத்தின் விலை, 53,000 தொடக்கம் 54,000 ரூபாவாக இருந்தது.
8 கிராம் எடையுள்ள 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது, 59,000 – 60,000 ரூபாவாக விற்கப்படுகிறது.  இது முன்னர், 50,000 – 51.000 வாக இருந்தது.
அதேவேளை தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்க கடத்தல் அதிகரிக்கும் என்றும் சட்டவிரோதமாக இறக்குமதிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இறக்குமதி தங்கத்தின் மீது 10 வீத வரியும், 3 வீத மதிப்புக்கூட்டு வரியும் விதிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்காவில் இருந்து தங்கக் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது, சிறிலங்காவில் 15 வீத வரி விதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தங்கம் கடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *