(ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று (23) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக
சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்படப்படவுள்ளதோடு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்து,தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற 06 அமைச்சர்களுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சர்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.