• Sun. Oct 12th, 2025

“இஸ்ரேல் ஒரு பயங்­க­ர­வாத நாடாகும்” – பத்தேகம சமித்த தேரர்

Byadmin

Apr 25, 2018

(“இஸ்ரேல் ஒரு பயங்­க­ர­வாத நாடாகும்” – பத்தேகம சமித்த தேரர்)

இஸ்­ரே­லி­யர்­களே!  உங்­க­ளது கரங்கள் இரத்­தத்­தினால் நனைந்து போயுள்­ளன. முத்­திரை ஒட்­டு­வ­தற்­காக பூசப்­பட்­டுள்ள பசை­களில் மிரு­கங்­களின் சேர்க்­கைகள் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்று உத்­த­ர­வா­த­ம­ளித்­துள்ள நீங்கள் பலஸ்தீன் காஸாவில் பலஸ்­தீ­னர்­களை மிரு­கங்­க­ளைப்போல் சுட்டுக் கொல்­கி­றீர்கள். அப்­பாவி பலஸ்தீன் மக்­க­ளுக்­காக இலங்­கை­யர்கள் நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தென்மாகாணசபை உறுப்பினர் பத்­தே­கம சமித்த தேரர் தெரி­வித்தார்.
பலஸ்­தீனில் நடை­பெற்ற சர்­வதே மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக விண்­ணப்­பித்து இஸ்­ரே­லினால் விசா மறுக்­கப்­பட்­டமை தொடர்பில் விளக்­க­ம­ளிப்­ப­தற்­கான ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேய அவர் இவ்­வாறு கூறினார்.
கொழும்­பி­லுள்ள பலஸ்தீன் தூத­ர­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் அவர் தொடர்ந்து விளக்­க­ம­ளிக்­கையில்;
இஸ்ரேல் ஒரு பயங்­க­ர­வாத நாடாகும். பலஸ்தீன் மக்­களை அடி­மைப்­ப­டுத்தும் நாடாகும். இலங்­கை­ய­ரான எமக்கு பலஸ்­தீ­னுக்கு செல்­வ­தற்கு விசா மறுக்­கப்­பட்­டமை அநீ­தி­யாகும். ஏன் எமக்கு விசா வழங்­க­வில்லை. நாங்கள் நிச்­ச­ய­மாக பலஸ்­தீன மக்கள் சுதந்­திரம் பெற்­றுக்­கொள்ளும் வரை அவர்­க­ளுக்­காக குரல் கொடுப்போம். ஆத­ர­வ­ளிப்போம்.
இஸ்ரேல் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக உலகில் மக்­களைத் திரட்­டு­வ­தற்­கான எமது முன்­னெ­டுப்­புகள் தொடரும். வரு­டாந்தம் பலஸ்­தீனில் நடை­பெறும் மாநாட்­டுக்குச் செல்­வ­தற்கு விசா கோரியே நான் விண்­ணப்­பித்­தி­ருந்தேன். நான் இலங்­கையன். பயங்­க­ர­வா­தி­யல்ல. கரு­ணை­யைப்­போ­திக்கும் ஒரு மதத்­துக்குச் சொந்­தக்­காரன். ஆனால் எனக்கு இஸ்ரேல் விசா­வினை மறுத்­து­விட்­டது.
இதி­லி­ருந்து இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு பயங்­க­ர­வாதம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பலஸ்தீனர்களின் விடுதலைக்காக இலங்கையர்கள் நாம் குரல் கொடுப்போம் என்றார்.
நிகழ்வில் பலஸ்தீனின் இலங்கைக்கான தூதரக அதிகாரி ஹிசாம் அபூ தாஹாவும் கலந்துகொண்டிருந்தார்.
-Vidivelli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *