(புதிய களனி பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை)
புதிய களனி பாலத்தின் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து இடைக்கிடை மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(03) முதல் எதிர்வரும் 05ம் திகதி வரையான நாட்களில் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்றுப் வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.