(மஹிந்தவின் இப்தார் – முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி, அமைச்சர் ரிசாட்டின் கட்சி பிரதிநிதிகள், மசூல் மௌலானா, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு தெரிவான 20 உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பிரதிநிதில் என அனைவரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
அதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.