கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் உயர்ந்து “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில்…
உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் அணி
இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.நேற்று (05) நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இந்த தகுதியை…
இஸ்லாமிய நாடுகள் விடுத்துள்ள அழைப்பு
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அதன் உறுப்பினர்களுக்கு “ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், காசாவில் இனப்படுகொலை குற்றத்தைச் செய்ய அதன் இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்தவும்” அழைப்பு விடுத்துள்ளது. “இராஜதந்திர, அரசியல் மற்றும்…
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பெரிய கொங்ரீட் தளம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.பெம்முல்ல கந்தஒலுவாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.நேற்று மதியம் இந்த கொங்ரீட் தளம் உடைந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சாதாரண தர பரீட்சை பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதற்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…
முட்டை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்க…
பம்பலப்பிட்டியை உலுக்கிய 20 பேர் அதிரடியாக கைது
பம்பலப்பிட்டி காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்…
நாடு திரும்பவுள்ள மதீஷ பத்திரன!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரன உபாதைக்கு உள்ளானார்.இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எனவே, அவர் இலங்கை திரும்ப உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரில்…
தேவையான அனைத்தையும், அல்லாஹ்விடம் கேட்டல்
என்_அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள். என்_அடியார்களே! உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.…
பேரிழப்பை சந்தித்துள்ளதாக ஸ்டார்பக்ஸ் அறிவிப்பு – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிகர வருமானத்தில் ($772 மில்லியன்) 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு, இந்த சரிவு மிக மோசமானது என ஸ்டார்பக்ஸ் கவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஸ்டார்பக்ஸ் உதவிசெய்வதாக முஸ்லிம்கள்…