• Sat. Oct 11th, 2025

Batticaloa Campus அமைப்பதற்கு அனுமதியையும், அதற்காக 200 ஏக்கர் காணியையும் வழங்கிய மஹிந்த

Byadmin

Aug 20, 2018
(Batticaloa Campus அமைப்பதற்கு அனுமதியையும், அதற்காக 200 ஏக்கர் காணியையும் வழங்கிய மஹிந்த)
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னஎன்ற கிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பெற்று வருகின்ற.( Batticaloa Campus – Sri Lanka) என்ற அரச சார்பற்றபல்கலைக்கழகமாகும்.
இப்படியானதொரு பல்கலைக்கழகத்தைஅமைக்கவேண்டும் என்று என்னம் கொண்ட,தற்போதய இராஜாங்க அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அன்றய ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் இந்த திட்டத்தைதெரிவித்தபோது சந்தோசமான முறையில் அதற்குஅனுமதி வழங்கியதுடன், அதனைஅமைப்பதற்கான  காணியையும்வழங்கியிருந்தார்.
அதன் பிற்பாடு சவூதி அரசாங்கத்தினூடாக பலகோடிகள் முதலீட்டில் இப் பல்கலைக்கழகம்நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும்நாம் அறிவோம்.
இந்த பல்கலைகழத்தினூடாக 3000 மேற்பட்டமுஸ்லிம் மாணவர்கள் பிரயோசனமடையஇருக்கின்றார்கள்.
இதோடு விவசாய வர்த்தக பீடம் விவசாயபட்டத்தினையும், இஸ்லாமிய ஷரீயாகற்கைகளுக்குமான பட்டங்களையும், கட்டிடவடிவமைப்புக்கான பட்டங்களையும், மிகமுக்கியமான சகல வசதிகளும் கொண்டஉலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவபீடமொன்றையும் உருவாக்குவதற்கான சகலவேலைப்பாடுகளும் நடந்து வருகின்றன.
அதே நேரம் மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்குமலேசியாவில் உள்ள 06 பல்கலைக்கழகங்களோடுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களும்செய்யப்பட்டுள்ளன.
மேலும் சீனா, தாய்லாந்து, சூடான் நாட்டுப்பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வுஒப்பந்தங்கள் செய்யவும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இந்த பல்கலைக்கழகத்தினூடாக எதிர்காலத்தில்ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும்பொறியியலாளர்களும்,கணக்காளர்களாகவும்,சட்டத்தரணிகளாகவும்,முஸ்லிம் மாணவர்கள்உருவாகவுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவோமறைக்கவோ முடியாது என்பதேசத்தியமானதாகும்.இத்தனைக்கும் காரணமானஅமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களை இந்தப்பணிக்காக யாரும் பாராட்டாமலும்இருக்கமுடியாது.
இந்த நிலையில் இப்படியான திட்டத்திற்குஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அதற்கானகாணியையும் வழங்கிவைத்த முன்னால்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும்யாரும் இலேசாக மறந்துவிடவும் முடியாது.
இப்படியானதொரு பல்கலைக்கழத்துக்கானஅனுமதியை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில்நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதைமறந்துவிடவும்  முடியாது.சவூதி அரசாங்கத்தோடுமஹிந்த அரசாங்கம் இருந்த உறவின்காரணமாகவே இந்தத் திட்டத்திற்குபலகோடிகளை செலவு செய்வதற்கு சவூதிஅரசாங்கம் முன்வந்தது என்றால் அதுவும் மிகையாகாது.
ஆகவே முஸ்லிம் மக்களுக்கு பெரும் ஒருபொக்கிசமாக கருதப்படும் இந்தபல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முழு மூச்சாகசெயல்படும் அமைச்சர் ஹிஸ்புல்லாஅவர்களையும், இதற்கான அனுமதியை வழங்கியமுன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஅவர்களையும், இந்த திட்டத்துக்காகபலகோடிகளை ஒதுக்கி தந்த சவூதிஅரசாங்கத்தையும் முஸ்லிம்கள் காலாகாலமாகபாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள்என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாதுஎன்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *