(ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை)
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை(15) சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக அது பிற்போடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.