• Sun. Oct 12th, 2025

சுதந்திரக் கட்சியிலிருந்து 5 பேர் பதவி நீக்கம்

Byadmin

Sep 21, 2018

(சுதந்திரக் கட்சியிலிருந்து 5 பேர் பதவி நீக்கம்)

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்த பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தக் கட்சியின் தேர்தல் குழுவை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே அவர்கள் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *