• Mon. Oct 13th, 2025

பாடசாலை மூடப்பட்டதால் கல்வியை கைவிடும் நிலையில் மாணவர்கள்

Byadmin

Jun 19, 2017

வவுனியா வடக்கு வாருடையார், இலுப்பைக்குளம் வித்தியாலயம் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த கூடுதலான மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலுப்பைக்குளம் கிராமத்தில் உள்ள மேற்படி பாடசாலையில் தரம் 1 – 5 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்கி வந்தது.

குறித்த பாடசாலை கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையும் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில் குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *