• Sun. Oct 12th, 2025

மீண்டும் “ஜனபலய”… கொழும்பில் மாபெரும் ​போராட்டம்

Byadmin

Nov 1, 2018

(மீண்டும் “ஜனபலய”… கொழும்பில் மாபெரும் ​போராட்டம் )

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அடங்களான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் மாபெரும் ​போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இந்தப் போராட்டத்துக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டில் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் மக்களை கொழும்புக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கலந்துரையாடலின் போது இந்த ஆதரவு போராட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *