• Sat. Apr 18th, 2026

எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் அறிவிப்பு

Byadmin

Nov 1, 2018

(எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் அறிவிப்பு)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளி அன்று புதிய  பிரதமர் ஆக மஹிந்த ராஜபக்ஸ அடங்களான புதிய அரசாங்கத்தை நிறுவிய பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி  மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும் என அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியை சந்தித்து மீண்டும் விரைவில் பாராளுமன்றை கூடுமாறு வேண்டுகோள் விடுக்க , ஜனாதிபதியும் அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால் திகதி பற்றி தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் அது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அதிரவரும் திங்கள் கிழமை ( நவம்பர் 5 ) மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *