• Tue. Apr 14th, 2026

மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, விலைகள் குறைக்கப்பட்ட நிவாரணப் பொதி விபரம்

Byadmin

Nov 2, 2018

(மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, விலைகள் குறைக்கப்பட்ட நிவாரணப் பொதி விபரம்)

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அத்தியாவசியப்
​பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிவாரணப் பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்று (01) நள்ளிரவு முதல், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 155 ரூபாயிலிருந்து 145 ரூபாயாகவும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை, 123 ரூபாயிலிருந்து 116 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இது தவிர, நிவாரணப் பொதி தொடர்பான விவரங்கள் பின்வருமாறு,

பருப்பு மற்றும் கடலை என்பன, ஒரு கிலோகிராம் 5 ரூபாயாலும் உளுந்து ஒரு கிலோகிராம் 25 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது. கோதுமை உள்ளீடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 ரூபாய் தீர்வை வரி, 9 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனிக்கான விசேட பண்ட வரியில் மாற்றம் ஏற்படுத்தப்படாத நிலையில், ஒரு கிலோகிராம் சீனியின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *