(அலரி மாளிகையிலிருந்து ரணில், வெளியேற வேண்டும் – அனுரகுமார)
ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதனால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும்.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.