• Sun. Oct 12th, 2025

மான நஷ்ட வழக்கு போட்ட கிரீஸ் கெயிலுக்கு 4 கோடி நஷ்டஈடு கிடைத்தது

Byadmin

Dec 4, 2018

(மான நஷ்ட வழக்கு போட்ட கிரீஸ் கெயிலுக்கு 4 கோடி நஷ்டஈடு கிடைத்தது)

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலுக்கு  £173,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்.
( சுமார் 4 கோடி இலங்கை ரூபா )  நஷ்டஈடு வழங்குமாறு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொரின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பெண் மருத்துவ நிபுணரிடம் கெயில் ஆபாச செயலொன்றை வெளிப்படுத்தியதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து தன்னைப் பற்றி அவ­தூ­றாக எழு­திய அவுஸ்­தி­ரே­லிய ஊடகம் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார் கெயில்.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதி­மன்றம் கெயி­லுக்கு ஆத­ர­வான தீர்ப் பை கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் அளித்­தது.

இந்­ நி­லையில் அவதூறு வழக்கில் கெயி­லுக்­கான இழப்­பீ­டாக Aus $300,000 (USD 221,000)  டொலர்களை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *