• Sat. Oct 11th, 2025

உமா ஓயா திட்­டத்­திற்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த பொது­மக்கள்

Byadmin

Jun 29, 2017

-திய­த­லாவ, பதுளை மேலதிகம், பண்டாராவளை மேலதிக நிரு­பர்கள் –
ஸ்தம்­பித்­தது பண்­டா­ர­வளை நகர்
அப்­புத்­த­ளையில் அமை­யப்­பெற்­று­வரும் உமா ஓயா திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று 28 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பண்­டா­ர­வளை நக­ரெங்கும் பாரிய ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இத்­திட்­டத்­தினால் பாதிப்­ப­டைந்த மக்­களும் இத்­திட்­டத்­திற்­கான எதி­ர­ணி­யி­னரும் இணைந்து ஒழுங்கு செய்­தி­ருந்த இவ்­வார்ப்­பாட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்கும் வகையில் வர்த்­த­கர்கள் பண்­டா­ர­வளை நக­ரெங்கும் தமது வர்த்­தக நிலை­யங்­களை மூடி­ய­துடன் பாட­சா­லைகள், வங்­கிகள் உள்­ளிட்­ட­வற்றின் செயற்­பா­டு­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­தன.

பதுளை, பண்­டா­ர­வளை, வெலி­மடை, அட்­டாம்­பிட்­டிய.  பூனா­கலை, அப்­புத்­தளை ஆகிய வீதி­களை மறித்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் திரண்டு கோஷங்­களை எழுப்­பியும் சுலோ­கங்­களை ஏந்­தியும் எதிர்ப்­பினை தெரி­வித்­தனர்.

இவ்­வெ­திர்ப்பு நட­வ­டிக்­கை­யா­னது பெரும் பேர­ணி­யாக வியா­பித்து பண்­டா­ர­வளை நகரை ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தது.

இதனால் பொதுப்­போக்­கு­வ­ரத்து, பொதுப்­ப­ணிகள் மற்றும் இயல்பு நட­வ­டிக்­கைகள் யாவும் முற்­றாக ஸ்தம்­பித்­தி­ருந்­ததைக் காண­மு­டிந்­தது.

பேர­ணியில் கலந்­து­கொண்ட பொது­மக்கள் கருத்து தெரி­விக்­கையில்,
உமா ஓயா திட்­டத்தின் மூலம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுரங்­கத்­தினால் இன்­று­வரை நாற்­ப­துக்கும் மேற்­பட்ட வீடுகள் தாழி­றங்­கி­யுள்­ளன. வியா­பார நிலை­யங்கள், பாட­சா­லைகள், தனியார் நிறு­வ­னங்கள் உட்­பட ஏழா­யி­ரத்­துக்கும் அதி­க­மான நிறு­வ­னங்­களின் கட்­டி­டங்­களில் வெடிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

மூவா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட கிண­றுகள் அடங்­க­லாக நீர் நிலை­களும் பெரும் பாதிப்­ப­டைந்­துள்­ளன. அத்­துடன் பண்­டா­ர­வளை பிர­தேசம் அனைத்தும் பெரும் பாதிப்பை எதிர்­நோக்­கி­யுள்­ளது.  பண்­டா­ர­வளை, எல்ல, வெலி­மடை, ஊவா பர­ண­கம, ஹாலி எல ஆகிய பிர­தே­சங்­களை  சூழ­வுள்ள ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட  கிரா­மங்கள் மேற்­குறித்த பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளன.

தொடர்ச்­சி­யாக எமது எதிர்ப்பை தெரி­வித்த போதும் பல­னில்லை. சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இவ்­வி­ட­யத்தில் எந்­த­வித பதி­லையும் தர­வில்லை. எமது நியா­ய­மான கோரிக்­கை­களை நிரா­க­ரித்தும் புறக்­க­ணித்­துமே வரு­கின்­றனர்.

அதன் கார­ண­மா­கவே பொது மக்­களும் வர்த்­த­கர்­களும் சிவில் அமைப்­புக்­களும் குறிப்­பாக 18 இற்கும் மேற்­பட்ட பொது அமைப்­புக்­களும் மதத்­த­லை­வர்­களும் ஒன்­றி­ணைந்து இவ்­வா­றான  எதிர்ப்பு பேர­ணியை இன்று (நேற்று) நடத்­து­கின்றோம்.

இனியும் எமக்கு உரிய தீர்வினை அரசு பெற்றுத்தராமலும், பாதிப்படைந்தவர்களுக்கு  நஷ்டஈடு வழங்காமலும் இருந்தால் பாரிய விளைவுகளையும் சேதங்களையும் சந்திக்க நேரிடும் என தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலிறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *