• Mon. Oct 13th, 2025

சீட்டுக்காசு கொடுக்க 2000ரூபா இல்லாததால் 19 வயது இளம்தாய் தற்கொலை

Byadmin

Mar 11, 2019

(சீட்டுக்காசு கொடுக்க 2000ரூபா இல்லாததால் 19 வயது இளம்தாய் தற்கொலை )

சீட்டுக்காசு கொடுக்க 2000/= ரூபா பணம் இல்லாததால் 19 வயது இளம் தாய் 3 வயது குழந்தையை தவிர்க்கவிட்டு தற்கொலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பில் சம்பவம்.
மேசன் தொழில் செய்துவரும் முரளீதரன் என்ற இளைஞன், 
தனது 17 ஆவது வயதிலும், ஜானு என்ற யுவதி தனது ஆவது 15 வயதிலும் திருமணம் முடித்து தற்போது மூன்று வயதுடைய பெண் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய நிலையில், ஆடைக் கொள்வனவு முதல் இன்னோரன்ன தேவைகளை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி ஜானு ஈடுபட்டுள்ளார்.

மாதாந்தம் 2000 /= என சீட்டுக்காசு கட்டுவதற்கு சேர்ந்ததால், நாளடைவில் இவற்றுக்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு தற்கொலைக்கு சென்றிருக்கிறார் என கணவர் முரளிதரன் தெரிவித்தார்.

மணிவாசகர் வீதி, மாவடிவேம்பு -02,ஐ சேர்ந்த, சிவானந்தம் ஜானு (19) என்ற இளம் தாயே இவ்வாறு. (10 /03) காலை 10.00 மணியளவில் தனது வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்தவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *