(4000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு நடிகர் ரயன் வேன் ரோயன் விடுதலை)
துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை விடுதலை செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 4000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.