• Sat. Oct 11th, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை…

Byadmin

Jul 3, 2017

நாட்டின் பல பகுதிகளில் இன்று(03) இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் குறித்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு மாகாணத்தில் இடைக்கிடையே 50Km வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *