மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சரணடைந்த அவரை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரட்டுமுல்ல பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது