• Sun. Oct 12th, 2025

நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Byadmin

Apr 12, 2022

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு (11) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *