• Sun. Oct 12th, 2025

அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

Byadmin

Apr 18, 2022

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை அன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *