பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் பதவி விலகவுள்ளதுடன், முழு அமைச்சரவையும் பதவி விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள்,உறுப்பினர்களை நாளை மாலை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக சுயாதீன தரப்பினர் குறிப்பிட்டனர்.