புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படமாட்டாது என பிரதமர் தெரிவித்தார்.
இன்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.