• Sat. Oct 11th, 2025

தொடரும் அதிசயம்! கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம்பழம்

Byadmin

Jul 11, 2017

நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேரீச்ச மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பார்ப்பவர்களின் கண்களைக் கவரக்கூடியதாக இந்த பேரீச்ச மரம் காய்த்து குலுங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *