• Wed. Apr 8th, 2026

வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாகவே எரிபொருளுக்கு பணம் செலுத்த தாமதமானது !எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.

Byadmin

Jun 15, 2022

வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

ஒருகொடவத்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு எரிபொருள் கோரி மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விநியோகம் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

3,900 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலுக்கு கட்டணம் செலுத்த முடியாமையால் இந்த நிலை ஏற்பட்டது. 5 நாட்களுக்கு மேலாக அந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *