• Sun. Oct 12th, 2025

முதலாவது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்.

Byadmin

Jun 12, 2022

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது

டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து தீர்மானித்துள்ளது.

கிரிகெட் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் இந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார், இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

ஷேன் வோர்ன் கிரிகெட் களத்தில் இலங்கையின் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராகவும், அதற்கு வெளியே ஒரு அன்பான நண்பராகவும் இருந்துள்ளார். 2004 இல் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

இலங்கை மற்றும் சுற்றுலா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வோர்ன் நினைவு டெஸ்ட் போட்டியில் வோர்னின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *