முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தீவிரமான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.