முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே, நிதியமைச்சின் அதிகாரிகள் இலங்கையின் மோசமான நிதி நிலைமை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்க தொடங்கினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலானது 2020,மே 13, திகதியிட்ட அமைச்சரவை குறிப்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது.
இதன்போது அவர்கள், ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் ஆகிய இரண்டு அம்சங்களும் குறைந்தது 50 சதவீதம் சரிவடையும் எனவும் எச்சரித்துள்ளனர்.