• Sat. Oct 11th, 2025

இன்றும் நாட்டின் பல பாகங்களில் கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு…

Byadmin

Aug 4, 2022

தென் மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டின் தென்மேற்கு காற் பகுதியிலும்அத்துடன் மேல் மற்றும் தென் கடல் பிராந்தியங்களிலும் நிலவுகின்ற  காற்றுடன் கூடிய மழை தொடரக்கூடும்  எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்  வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு 60km வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு, வடமத்திய, மேல், வடமேல்  மற்றும் தென் மாகாணங்களில்  மணித்தியாலத்திற்கு 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று  வீசக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் 

****************************

நாட்டை சூழ உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து  தென் மேற்குத்  திசையை நோக்கி  காற்று வீசும். 

புத்தளம்  தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும்  வரையில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *