• Mon. Oct 13th, 2025

மொரோக்கோ மன்னர் மாளிகையில் ரிஸ்வி முப்தி சிறப்பு சொற்பொழிவு

Byadmin

Apr 3, 2023

மொரோக்கோ ரபாத் மாநகரில் அமைந்துள்ள மன்னர் மாளிகையில் அதிமேதகு மன்னர் ஆறாவது முஹம்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் *’அல்ஹசனியத்துல்  ரமழானிய்யா’* என்ற வகுப்பு தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அல் உஸ்தாத் முஹம்மத் ரிஸ்வி முஹம்மத் இப்ராஹிம் அவர்கள் *31 மார்ச் 2023 ரமழான் பிறை 09* வெள்ளிக்கிழமை அன்று *’அல்குர்ஆன், சுன்னாவின் ஒளியில் நாம் எப்படி ஒரு முன்மாதிரி சமூகமாக அமைவது?’* என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார்கள்.

அவர்களது ஆய்வின் போது *’மனிதர்கள் தங்கம் வெள்ளி போன்ற சுரங்கங்கள்’* என்ற நபிமொழியை அடிப்படையாக வைத்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி வகுப்புத் தொடர் வானொலி அலைவரிசைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒலி, ஒளி பரப்பப்பட்டமை  மேலதிக சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *