• Sat. Oct 11th, 2025

LPL தொடரில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்களின் விபரம்

Byadmin

Apr 25, 2023


நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை LPL அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் கீழே,

மேற்கிந்திய தீவுகள் – டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட், ஜென்சன் சார்லஸ் மற்றும் ஆஷ்லி நர்ஸ்
நியூசிலாந்து – மிட்செல் சான்டர், இஷ் சோதி, டிம் சிஃபட், டாரில் மிட்செல் மற்றும் டக் பிரேஸ்வெல்
அயர்லாந்து – பால் ஸ்டிர்லிங்
நமீபியா – ஜெரார்ட் எராஸ்மஸ்
பங்களாதேஷ் – ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் அஃபிஃப் ஹுசைன்
பாகிஸ்தான் – முகமது நவாஸ், நசீம் ஷா மற்றும் வஹாப் ரியாஸ்
தென்னாப்பிரிக்கா – லுங்கி எங்கிடி, இம்ரான் தாஹிர் மற்றும் தப்ரீஸ் ஷம்சி
அவுஸ்திரேலியா – ஷோன் மார்ஷ், மேத்யூ வேட், டார்சி ஷார்ட் மற்றும் உஸ்மான் கவாஜா

காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய அணிகளின் பங்குபற்றுதலுடன் கொழும்பு மற்றும் கண்டியில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *