• Sun. Oct 12th, 2025

நாட்டில் 95 பெற்றோலுக்கான தட்டுப்பாடு இல்லை!

Byadmin

Jun 18, 2023


நாட்டில் எவ்வித எரிபொருட்களிலும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிவாயு நிரப்பு நிலையங்களில் 95 பெற்றோல் உட்பட வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 95 பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக வௌியான செய்தியை தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நாளாந்த 95 பெற்றோலின் தேவை 80-100 மெட்ரிக் தொன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிலையங்களில் போதுமான அளவு இருப்புக்கள் உள்ளதாகவும், தொடர்ச்சியாக அனைத்து ஓர்டர்களும் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 9000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலுடன் கூடிய அடுத்த கப்பல் எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *