• Sun. Oct 12th, 2025

எனது வாயை எவராலும் அடைக்க முடியாது: ரஞ்சன் ராமநாயக்க

Byadmin

Aug 18, 2017

எனது வாயை எவராலும் அடைக்க முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கள்வர்கள், ஊழல்மோசடிகளில் ஈடுபடுவோர், கொலைகாரர்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்களை அம்பலப்படுத்துவதற்கு நான் எடுக்கும் முயற்சியை எவராலும் தடுக்க முயாது.

1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நாட்டில் உருவான மிகவும் ஜனநாயகமான அரசாங்கம் இதுவாகும். இந்த 2020ஆம் ஆண்டை விடவும் நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்கும்.

தற்போதைய அரசாங்கம் எவருக்கும் தொல்லை கொடுப்பதில்லை. தொழில் வாய்ப்பு வழங்கும் போதும் பிரதான கட்சிகளுக்கு சம சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டால் அது இந்த அரசாங்கத்தினதும் கடந்த அரசாங்கத்தினதும் கள்வர்களையே பாதிக்கும். மக்களுக்காக குரல் கொடுப்பதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *