• Mon. Oct 13th, 2025

புகையிரத சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்பு

Byadmin

Sep 13, 2023

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத சாரதிகளுக்கு புகையிரத திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அவர்கள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு சமூகமளிக்காவிட்டால் சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அந்த விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 புகையிரத சாரதிகள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பும் நேற்று (12) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *