கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (23) மாலை 6 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (23) மாலை 6 மணி முதல் 24 ஆம் திகதி (ஞாயிறு) காலை 6 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அம்பத்தலயில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.