• Sat. Oct 11th, 2025

மீண்டும் விளையாடுவாரா..? இன்று பரிசீலிப்பு

Byadmin

Sep 28, 2023

தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று -28- பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்க குணதிலக விடுவிக்கப்பட்டதாக நீதிபதி சாரா ஹகெட் தீர்ப்பளித்தார்.

தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை கடந்த 21ஆம் திகதி முடிவடைந்த நிலையில், இன்று (28) தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலகவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *