• Sun. Oct 12th, 2025

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு

Byadmin

Oct 5, 2023

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இன்று காலை பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
78 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலையினால் மேலும் ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக மாத்தறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
நில்வளா கங்கை நிரம்பி வழிவதால் அக்குரஸ்ஸ, அத்துரலிய, கம்புருபிட்டிய, திஹாகொட, மாலிம்படை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மாத்தறை, கம்புறுபிட்டிய, கத்துவ கிராம மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் இன்றும் நாளையும் மூடுவதற்கு நேற்று தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, மாத்தறை நில்வளா கங்கை பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்தால் மாத்தறை பெரும் அபாயச் சூழலுக்கு உள்ளாகலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *