• Sat. Oct 11th, 2025

மியன்மார் – பங்ளாதேஷ் எல்லையில் கண்ணி வெடி புதைத்த மியன்மார் ராணுவம்

Byadmin

Sep 7, 2017
மியான்மார் வங்காளதேசம் எல்லையில் மியன்மார் ராணுவம் கண்ணி வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பதற்கு வங்காளதேசம் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளதென அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழும் ராக்கைனில் உள்ள பாதுகாப்பு படையின் மையங்கள் மீது போராளி குழு தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவம் தாக்குதலை நடத்தி வருவதாக மியான்மர் கூறி உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களில் 400க்கும் அதிகமனோர் உயிரிழந்து உள்ளனர்.ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக பங்களாதேஷ் சென்றுள்ளனர்.
இருநாட்டு எல்லையில் கண்ணி வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டு உள்ளது என மியான்மரிடம் தன்னுடைய எதிர்ப்பை பங்களாதேஷ் பதிவுசெய்துள்ளது.
மியான்மர் சர்வதேச விதிமுறைகளை மீறுகிறது என மியான்மரிடம் பங்ளாதேஷ் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது என அந்நாட்டு அரசு தகவல்கள் உறுதி செய்து உள்ளது என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *