பாதகமான வானிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களை இன்று (12) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பணியிடத்தில் உடல் ரீதியாக இருக்க வேண்டிய பதவிகள் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திறந்த வெளியில் வேலை செய்ய தேவைப்பட்டால், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தேவையான நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, துபாய், ஷார்ஜா, புஜைரா, அஜ்மான் மற்றும் ராஷ் ஹல் கைமா ஆகிய இடங்களில் நேற்று (11) பலத்த காற்று, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுக்கு அவசர அறிவித்தல்!
