• Sun. Oct 12th, 2025

குற்றவாளிக்கு பாலியல் உணர்வுகளை, இல்லாமல் செய்யும் சட்டம் அமுல்

Byadmin

Feb 17, 2024

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் மடகஸ்கார் அரசாங்கம் புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த குற்றவாளிக்கு படிப்படியாக பாலியல் உணர்வுகளை இல்லாமல் செய்யும் சிகிச்சை அளிக்கும் சட்டம் மடகஸ்கார் நாடாளுமன்றத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின் மூலம் பாலியல் உணர்வுகளை இல்லாதொழிக்க புதிய சட்டத்தின் மூலம் அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தில் மாத்திரம் 600 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 133 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையிலேயே, இவ்வாறான புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *