• Wed. Oct 22nd, 2025

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்!

Byadmin

Sep 7, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *