• Sat. Oct 11th, 2025

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம்

Byadmin

Oct 9, 2017

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரானபோராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என முன்னாள்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டைபாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷசூளுரைத்துள்ளார்.

மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களைவெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதைவலியுறுத்தி ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில்ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டு கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்செய்யப்பட்டது.

இதன் போது 28பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம்திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷஎம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

ஹம்பாந்தோட்டைய முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதுபொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாககுற்றம் சாட்டிய அவர் உண்மையை மறைக்கும் அரசாங்கதரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனவும்சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *