• Sun. Oct 12th, 2025

அதானிக்கு அமெரிக்கா அழைப்பாணை

Byadmin

Nov 24, 2024

பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச குற்றச்சாட்டுக்கு அமைய அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மேலும் அவரது மருமகனும் ‘அதானி கிரீன்’ நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளருமான சாகர் அதானிக்கும் இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைப் பெறும் நோக்கில் இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் அதானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *